search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வாலிபர் சுட்டுக்கொலை
    X

    பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வாலிபர் சுட்டுக்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தானை சேர்ந்த அவர் இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்றது தெரியவந்தது.
    • கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டது.

    பஞ்சாபின் டர்ன் தரானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டர்ன் தரான் மாவட்டத்தில் எல்லையோர கிராமமான தெகலான் அருகே விலும் என்ற இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாலிபர் திரிந்தார்.

    பாகிஸ்தானை சேர்ந்த அவர் இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்பு படை வீரர்கள் எச்சரித்தனர். தொடர்ந்து அவர் எல்லைநோக்கி விரைந்ததால் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் குண்டு பாய்ந்து பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான 3 கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டது.

    Next Story
    ×