என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மீஞ்சூர் பேரூராட்சியில் வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியலை முக்கிய சாலையில் பேனராக வைத்த அதிகாரிகள்
    X

    மீஞ்சூர் பேரூராட்சியில் வரி செலுத்தாதவர்கள் பெயர் பட்டியலை முக்கிய சாலையில் பேனராக வைத்த அதிகாரிகள்

    • மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • வரி செலுத்தாதவர்கள் மீது முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டிற்கான சொத்து வரி தொழில் வரி,குடிநீர் வரி, கடை வரி, வீட்டு வரி, வசூலிக்க பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு தலைமையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனினும் இன்னும் பலர் வரி செலுத்தாமல் உள்ளனர். தெருக்களில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்தும், ஒலி பெருக்கி மற்றும் துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று அறிவிப்பு, உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர்.

    வரி செலுத்தாதவர்கள் மீது முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வரி பாக்கி உள்ளவர்களின் பெயர் பட்டியலை மீஞ்சூர்-காட்டூர் சாலையில் பேரூராட்சி அதிகாரிகள் வைத்து உள்ளனர். இதேபோல் வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை ஒவ்வொரு தெருக்களிலும் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரூராட்சி செயல்அலுவலர் வெற்றியரசு தெரிவித்து உள்ளார். மீஞ்சூர் பேரூராட்சியில் இதுவரை 65 சதவீதம் பேர் வரி செலுத்தி உள்ளனர். வருகிற 30-ந் தேதிக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×