search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி முயற்சி
    X

    ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி முயற்சி

    • ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டாலும் சட்ட போராட்டத்தை மலைபோல் நம்பி இருக்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தடுத்து சரிவு ஏற்பட்டாலும் சட்ட போராட்டத்தை மலைபோல் நம்பி இருக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு கைவிட்ட நிலையில், கடைசியாக ஒரு தடவை கல்வீசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது புதிய கோணத்தில் தனது வக்கீலை வாதாட வைத்தார்.

    அதாவது அ.தி.மு.க.வில் தனக்கு உரிய வாய்ப்புகள் தரப்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்துள்ளார். அது மட்டுமின்றி அ.தி.மு.க. கட்சி பிரமுகர் மாற்றப்பட்டது பற்றியும் சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் வெளியில் தெரியாத சில விஷயங்களையும் தனது எழுத்துப்பூர்வமான பதிவில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்து இருக்கிறாராம்.

    இந்த புதிய முயற்சி மூலம் தனக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று அவர் நூறு சதவீத நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால் இதை அறிந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டு முடிவு யாருக்கு சாதகமாக வருமோ தெரியவில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் ரொம்ப.... ரொம்ப.. ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    Next Story
    ×