search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடையம் அருகே திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் படுகொலை
    X

    கடையம் அருகே திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் படுகொலை

    • இசக்கி செல்விக்கு கடந்த 31-ந்தேதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
    • மறுநாள் (1-ந்தேதி) காலை இசக்கி செல்விக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அன்று அதிகாலை திடீரென மாயமாகி விட்டார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த பெண் அம்பையை அடுத்த கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகள் இசக்கி செல்வி(வயது 23) என்பது தெரியவந்தது.

    இசக்கி செல்விக்கு கடந்த 31-ந்தேதி துப்பாக்குடி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மறுநாள்(1-ந்தேதி) காலை அவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் அன்று அதிகாலை இசக்கி செல்வி திடீரென மாயமாகி விட்டார்.

    உடனே அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு வாலிபரை அவர் திருமணம் செய்து கொண்டார். இதற்கு 2 வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இசக்கி செல்வி தனது கணவருடன் கடையம் அருகே கோவிலூத்து பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்ட இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தான் அவர் மறுநாள் ஓடையில் கொலைசெய்யப்பட்ட பிணமாக மீட்கப்பட்டு உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் நேற்றுமாலை இசக்கி செல்வியை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும் தெரியவந்தது. அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இசக்கி செல்வியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×