என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டல்களில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்
- மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று மாலை முதலே களை கட்டியது.
- செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர், கோயம்பேடு செல்லும் பயணிகள் நீண்டநேரம் காத்து கிடந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று மாலை முதலே களை கட்டியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதியில் நேற்று மாலை 6 மணியில் இருந்தே விளையாட்டு போட்டிகள், நடனம், பேஷன்ஷோ, உணவுத் திரு விழா போன்ற நிகழ்ச்சிகள் நள்ளிரவு 12 மணிவரை நடத்தபட்டது.
இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதி. வெளியூர், வெளிமாநில பயணிகள் ஏராளமானோர் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர். நள்ளிரவு புத்தாண்டு பிறந்ததும் அவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டனர்.
மாமல்லபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளுக்கு இரவு நேரத்தில் போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர், கோயம்பேடு செல்லும் பயணிகள் நீண்டநேரம் காத்து கிடந்தனர். வரும் பஸ்களில் குழந்தைகளுடன் முண்டியடித்து ஏறும் நிலை ஏற்பட்டது.






