search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யக்கோரி நாடார் அமைப்புகள் முற்றுகை போராட்டம்
    X

    ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யக்கோரி நாடார் அமைப்புகள் முற்றுகை போராட்டம்

    • தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆர்.எஸ்.பாரதியை நீக்க வேண்டும்.
    • நாடார் அமைப்பினர் போராட்டத்தையொட்டி தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    சென்னை:

    பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் இழிவாக பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.

    ஆலந்தூர் நாடார் சங்க திருமண மண்டபம் அருகில் நாடார் அமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டனர். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் நாடார் தலைமையில், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம். சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

    பா.ம.க. மாநில பொருளாளர் கவிஞர் திலக பாமா போராட்டத்தை தொடங்கி வைத்தார். நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். 'கைது செய்... கைது செய்... ஆர்.எஸ்.பாரதியை கைது செய்...' என்று முழக்கமிட்டனர். போராட்டம் நடந்த இடத்துக்கு அருகில் ஆர்.எஸ். பாரதியின் வீடு உள்ளது.

    அதனை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடந்து செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன தலைவர் போரூர் ஆனந்த ராஜ், செயலாளர் சந்திர சேகர பாண்டியன், தட்சண மாற நாடார் சங்கம் சென்னை கிளை சேர்மன் செல்வராஜ், தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவராஜிராஜன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பு தலைவர் பூமி நாதன்,

    அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், காமராஜர் வம்ச பேரவை தலைவர் பெர்னட் ஜென்சன், மேடவாக்கம் நாடார் சங்க பொதுச்செயலாளர் முருகானந்தம், நாடார் பாதுகாப்பு பேரவை கவுரவ தலைவர் வி.எல்.சி. பிரேம்குமார், நாடார் சங்க தலைவர் சேகர், கோயம்பேடு நாடார் சங்க தலைவர் என்.ஆர்.பி. ஆதித்தன்.

    கீழ்கட்டளை நாடார் சங்க தலைவர் பால முருகன், பாண்டியநாடு நாடார் பேரவை தலைவர் சுருக்கு வேல்ராஜன், கலாம் காமராஜர், கக்கன் அறக்கட்டளை பொதுச்செயலாளர் வேல்முருகன், தமிழ்நாடு நாடார் சங்க பொதுச் செயலாளர் வீரகுமார், தலைமை நிலைய செயலாளர் பொன்ராஜ், நாடார் பாதுகாப்பு பேரவை செயலாளர் கோயம்பேடு சுரேஷ், பால்பாண்டியன்.

    ஆலந்தூர் ஸ்ரீதர், மார்க்கெட் ஞானபால், பத்மநாபன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், உயர்மட்டக்குழு செயலாளர் உதயகுமார், தென்சென்னை மாவட்ட தலைவர் வைகுண்ட ராஜன், தென்மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் ராஜீ, கவிராஜ், கருணைதாசன், வக்கீல் ஆல்பின் மனோ உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் கூறும்போது, 'தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து நாடார் சமுதாயத்தை இழிவாக பேசி வருகிறார். நாடார் பெண்கள் மட்டுமின்றி தமிழ் பெண்களையும் இழிவுபடுத்துகிறார்.

    அவரை பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து போராட்டம் நடத்துவோம்' என்றார்.

    நாடார் அமைப்பினர் போராட்டத்தையொட்டி தில்லை கங்கா நகர் 26-வது தெருவில் உள்ள ஆர்.எஸ். பாரதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×