என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரி தாலுகாவில் மழைக்கால அவசர கட்டுப்பாடு மையம்
- 24 மணி நேரமும் செயல்படும் இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பேரிடர் காலங்களில் உள்ள குறைகளை பதிவு செய்யவும்.
- அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் உத்தரவுப்படி கடற்கரை அருகே உள்ள கிராமங்களில் பேரிடர் காலங்களில் புயல் பாதுகாப்பு மையம், மண்டபங்கள், உணவுகள், மீட்புகுழுக்கள், அனைத்து துறைகள், தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரிடர் அவசர கட்டுப்பாடு மையம் திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இதில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பேரிடர் காலங்களில் உள்ள குறைகளை பதிவு செய்யவும். இதன் மூலம் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னேரி தாலுகா தொலை பேசி எண்கள் 044-27972252, 944500049-ல் தொடர்பு கொண்டு பேரிடர் காலங்களில் பாதிப்பு குறித்து தொடர்பு கொள்ளலாம் என்று தாசில்தார் செல்வகுமார் தெரிவித்து உள்ளார்.
Next Story






