search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே மாணவர்களின் சத்துணவை சாப்பிட்டு எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    பொன்னேரி அருகே மாணவர்களின் சத்துணவை சாப்பிட்டு எம்.எல்.ஏ. ஆய்வு

    • பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
    • பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.

    இங்கு சுமார் 250 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது போதிய கழிவறை வசதி இல்லை, வகுப்பறை ஜன்னல்கள் உடைந்து காணப்படுகிறது. பள்ளியை சுற்றி சுற்றுசுவர் இல்லாததால் மாடுகள் பள்ளிக்குள் புகுந்து விடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ. பள்ளியின் சமையலறைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்டு இருந்த சத்துணவை சாப்பிட்டு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார்.

    மேலும் ஆசிரியரிடம் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    அப்போது ஊராட்சி தலைவர் பவானி கங்கை அமரன், தலைமை ஆசிரியர் பியூலா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×