search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வட்டி தொகை மூலம் கோவில்களை மேம்படுத்த 4 ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்படும்- அமைச்சர் தகவல்
    X

    வட்டி தொகை மூலம் கோவில்களை மேம்படுத்த 4 ஆயிரம் கிலோ தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்படும்- அமைச்சர் தகவல்

    • பாதாள பொன்னியம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் நிறுத்தும் மண்டப கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
    • இருக்கன்குடி மாரியம்மன் கோயில் 28 கிலோ தங்க நகைகள் முதலீடு செய்யப்பட்டு ஆண்டொன்றுக்கு 38 லட்சம் வட்டித் தொகையாகவும் வருகின்றன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னை மண்டலத்திற்குட்பட்ட 4 கோவில்களில் ரூ. 1,48 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    சென்னை, பெரம்பூர், செம்பியம் லெட்சுமி அம்மாள் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலான ராஜகோபுரம் மண்டப சுதை சிற்பங்கள் சரிபார்த்து வண்ணப் பூச்சி பூசுதல், கருங்கல் தளம் அமைத்தல், அம்மன் சன்னதி மகா மண்டபம், உப சன்னதிகள் பழுது பார்த்தல் போன்ற திருப்பணிகளையும், வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டிலான திருக்குள புனரமைப்பு பணிகளையும், கொருக்குப்பேட்டை, பெரியநாயகி அம்மன் கோவிலில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலான மகா மண்டபம், உற்சவர் மற்றும் நவக்கிரக மண்டங்கள் கட்டுதல் போன்ற பணிகளையும், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் நிறுத்தும் மண்டப கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பெரியபாளையத்தம்மன் கோவிலின் நகைகள் சுத்த தங்கமாக மாற்றி 98 கிலோ தங்கநிதி வைப்பு நிதி பத்திரத்தில் வைக்கப்பட்டு ஆண்டொன்றுக்கு ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் வட்டி தொகையாகவும், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் 28 கிலோ தங்க நகைகள் முதலீடு செய்யப்பட்டு ஆண்டொன்றுக்கு 38 லட்சம் வட்டித் தொகையாகவும் வருகின்றன, அந்தத் தொகை அந்தந்த கோவிலின் மேம்பாட்டிற்கு செலவிடப்படும்.

    அதேபோல திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களிலும் பயன்படுத்த இயலாத தங்க நகைகள் நீதிபதி முன்னிலையில் முழுமையாக அளவிடப்பட்டு, சுத்தத் தங்கமாக மாற்றிட தற்போது மும்பைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

    இந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் குறைந்தபட்சம் 4 ஆயிரம் கிலோ தங்கமாவது கோவில் பெயரிலே வைப்பு நிதியாக வைக்கப்படும் சூழல் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×