search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2030 ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் இளைஞர்களை தொழில் நுட்ப வல்லுநர்களாக உருவாக்க இலக்கு- அமைச்சர் பேட்டி
    X

    2030 ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் இளைஞர்களை தொழில் நுட்ப வல்லுநர்களாக உருவாக்க இலக்கு- அமைச்சர் பேட்டி

    • தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த முடியாது.
    • தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என்ன செய்தாலும் பயன் இல்லை.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் தமிழ் வழி கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான 2 நாட்கள் பயிற்சி முகாமினை தமிழ்நாடு தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெயபி ரசாத் ஒருங்கிணைப்பு செய்தார்.

    ஜெரால்ட், ரோட்டரி சங்க தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அட்டுவம்பட்டி பகுதியில் நடந்த தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டு தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கான்பெடரேஷன் ஐ.டி. அசோசியேசன் தொழில் முனைவோர் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த அமைப்பினர் சேவை மட்டும் செய்யாமல் தீர்வையும் ஏற்படுத்த வேண்டும். விவசாயம், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் உள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப துறை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் உள்ள பிரசினைகளை தீர்ப்பதற்கு தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்த முறை தேவை.

    2030 ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் இளைஞர்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த முடியாது. ஊரக பகுதிகளில் அனைத்து வகையான கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மூலம் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

    தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என்ன செய்தாலும் பயன் இல்லை. உதயசூரியன் உதித்துக் கொண்டே இருக்கும். நல்ல தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறந்த கொள்கை உடைய, உறுதியான தொண்டர்களைக் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது.

    கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்காக நாங்கள் பணி செய்து வருகிறோம். திராவிட மாடல் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று அண்ணாமலை பேசுகிறார். அவர் எந்த நிலையில் இதை பேசுகிறார் என்று நீங்கள் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சமாதான கொள்கை சமுதாய ஒற்றுமைக்கு எதிரானது நம்ப வைத்து ஏமாற்றி வருகின்றார்கள் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×