search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம் பக்கிங்காம் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
    X

    சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்


    மாமல்லபுரம் பக்கிங்காம் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

    • மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
    • சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் தீயிட்டு அழிக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த சாலையோரம் ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்திய கழிவுகள் குவியலாக கொட்டப்படுவது அதிகரித்து உள்ளது.

    சாலையோரம் பல இடங்களில் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டு கிடக்கின்றன. நேற்று இரவு வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் ரத்தகறை படிந்த மருத்துவகழிவுகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை கொட்டி சென்று விட்டனர்.இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதற்கிடையே சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் தீயிட்டு அழிக்கிறது. திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதால் அதன் மூலம் வெளியேறும் புகையால் அருகில் உள்ள அண்ணாநகர், சூழைமேடு குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சிறந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டாத வகையில் கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×