என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரி தூர் வாரும் பணி- அமைச்சர் நேரில் ஆய்வு
- ஏரியின் சுற்றுபுறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளாகமாக உருவாக்கப்படும்.
- பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரி தூர் வாரும் பணி நீர் வளத்துறையின் சார்பில் ரூ.112.42 கோடி மதிப்பீட்டில் நடைபெறுவதை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
பெருமாள் ஏரியின் இயல்பான கொள்ளவு 574 மில்லியன் கன அடியாகும். தற்போது 228.86 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது தூர் வாரும் பணியின் மூலம் சுமார் 1.40 கோடி கனமீட்டர் அளவிளான மண் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மண் எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் ஏரியின் கொள்ளவு அதன் தற்போதைய கொள்ளவான 228.86 மில்லியன் கன அடியில் இருந்து 723.27 மில்லியன் கன அடியாக உயரும், எனவே இதன் மூலம் ஏரியின் இயல்பான கொள்ளவை விட கூடுதலாக 149.27 மில்லியன் கன அடி நீர் சேமிக்க இயலும்.
பொருமாள் ஏரியின் மூலம் 6,503 ஏக்கர் விலை நிலங்கள் தற்போது வரை 1 போக சாகுபடிக்கு பாசன நீர் பெற்று வந்தது. இப்பணி முடிவுற்றதும் சுற்றியுள்ள விளைநிலங்கள் இருபோக சாகுபடிக்கு பாசன நீர்பெறும் வகையில் அமையும். இதுவரை சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் அடுத்த 3 மாதங்களில் முடிவடையும். ஏரியின் சுற்றுபுறங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை வளாகமாக உருவாக்கப்படும்.
மேலும் விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று இந்த ஏரியில் இருந்து பிரியும் 11 பிரதான பாசன வாய்க்கால்களை தூர்வாரி சிறப்பான முறையில் பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பாலசுப்ரமணியம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், நீர் வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்