search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ராகுல் காந்தி வாழ்த்து
    X

    கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ராகுல் காந்தி வாழ்த்து

    • தேசிய தோழர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • காமராஜரின் கொள்கையை பின்பற்றி தமிழகத்தில் தேசியத்தை வளர்க்க பாடுபடுவேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திருநாவுக்கரசர் எம். பி., இளங்கோவன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    எனது நண்பர்கள் தேசிய தோழர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காமராஜரின் கொள்கையை பின்பற்றி தமிழகத்தில் தேசியத்தை வளர்க்க பாடுபடுவேன். சமத்துவத்தை நிலைநாட்டவும் சமூக நீதி நிலைக்கவும் தொடர்ந்து பணியாற்றுவேன். நாட்டில் வேறுபாடுகளை களையத்தான் இத்தனை ஆண்டு காலம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதையும் நியாயப்படுத்த ஒரு கூட்டம் வந்திருக்கிறது. அதை தத்துவ ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் வேரறுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கே.எஸ்.அழகிரியின் பிறந்த நாளை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தளபதி எஸ்.பாஸ்கர், மாநில முதன்மை செயலாளர் முனிஸ்வர் கணேஷ், மாநில செயலாளர் அக்ரா வரம் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் ஓ.வி.ஆர்.ரஞ்சித், மாநில செயலாளர்கள் அயன்புரம் சரவணன், எஸ்.ரஞ்சித் குமார் ஆகியோர் ஏற்பாட்டில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜெயக்குமார் எம்.பி., ஆகியோர் 72 கிலோ பிறந்தநாள் கேக் வெட்டினார்கள்.

    தொடர்ந்து, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், மதியம் பிரியாணி வழங்கப்பட்டது. இதில், துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, உ. பலராமன் பொதுச்செயலாளர்கள் எஸ்.ஏ.வாசு, பி.வி.தமிழ்ச்செல்வன், எம்.எம்.டி.ஏ.கோபி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், வில்லிவாக்கம் சுரேஷ், கவுன்சிலர் தனலெட்சுமி, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, வழக்கறிஞர் நவாஸ், சூளை ராஜேந்திரன், எஸ்.கே. அகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம் புதுப்பேட்டையில் டாக்டர் உமா பாலன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன் குமார் கேக் வெட்டினார். அதைத் தொடர்ந்து டேபிள் பேன், மிக்சி மற்றும் பெண்களுக்கு சேலை, தொழிலாளர்களுக்கு வேஷ்டி, சட்டை, லுங்கி ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்த மாவட்டத்தில் உள்ள 39 வட்டத் தலைவர்களுக்கும் தலா ரூ. 5ஆயிரம் நிதியும் வழங்கப்பட்டது. தலித் பெண் ஒருவரின் மகப்பேறு மருத்துவ செலவுக்காக ரூ.40 ஆயிரம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×