search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேட்டில் குடோனில் பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல்- வாலிபர் கைது
    X

    கோயம்பேட்டில் குடோனில் பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல்- வாலிபர் கைது

    • குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் குட்கா சப்ளை நடப்பதாக துணை கமிஷனர் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    கோயம்பேடு நூறடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த சரக்கு வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான குட்கா மூட்டைகள் இருந்தன.

    இதையடுத்து குட்கா கடத்தலில் ஈடுபட்ட சுரேஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் கைதான சுரேசிடம் இருந்து ரூ.50ஆயிரம் ரொக்கம், 2 மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் குட்கா, புகையிலை பொருட்களை வரவழைத்து அதனை மாங்காட்டில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து சென்னை முழுவதும் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. குட்கா கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு வரும் கும்பல் குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×