search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேத்துப்பட்டில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.25 லட்சம் மாயம்- வேலைக்கார பெண்ணிடம் விசாரணை
    X

    சேத்துப்பட்டில் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.25 லட்சம் மாயம்- வேலைக்கார பெண்ணிடம் விசாரணை

    • கடந்த பிப்ரவரி மாதம் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
    • போலீசார் பெரும்பாக்கத்தில் வசித்து வரும் வேலைக்கார பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிப்பவர் அனீஸ்ரெட்டி. இவர் தனியார் நிறுவனத்தில் கன்சல்டன்டாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் அன்று தனது வியாபார தேவைக்காக 25 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து பீரோவில் வைத்திருந்தேன்.

    பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 2012-ம் ஆண்டு முதல் தனது வீட்டில் அப்பாசாமி தெருவில் வசித்து வந்த பழனியம்மாள் (41) என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்ததாகவும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அவர் பணிக்கு வர வில்லை.

    ஆகையால் அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் பெரும்பாக்கத்தில் வசித்து வரும் வேலைக்கார பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×