என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை
    X

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மழைநீரோடு கழிவுநீர் கலந்து செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியில் சென்று சேருகிறது.

    செங்கல்பட்டு:

    வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையில் இருந்து வேகமாக மழை பெய்து வருகிறது. இன்று காலை பெய்த மழையில் செங்கல்பட்டு நகரத்தில் உள்ள டாக்டர் வரதராசனார் தெருவில் மழை நீரோடு கழிவுநீர் கலந்து தெருவில் கறுப்பாக ஆறாக ஓடுகிறது.

    மழைநீரோடு கழிவுநீர் கலந்து செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரியில் சென்று சேருகிறது. பின்பு கொளவாய் ஏரியில் இருந்து மதகுவழியாக பாலாற்றில் சென்று கலக்கிறது.

    இந்த பாலாற்று நீரை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் மற்றும் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மழைநீர் கழிவுநீரோடு கலந்து செங்கல்பட்டில் உள்ள மிகப்பெரிய ஏரியான கொளவாய் ஏரியில் கலக்கிறது.

    இந்த கொளவாய் ஏரி தண்ணீர் மதகு வழியாக பாலாற்றில் சென்று கலப்பதால் பாலாற்று குடிநீர் மாசடைகிறது.

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 71 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 76 ஏரிகள் 75 சதவீதத்தில் இருந்து 99 சதவீதமாகவும், 235 ஏரிகள் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகவும், 280 ஏரிகள் 25 சதவீதத்தில் இருந்து 50சதவீதம் வரை நிரம்பி உள்ளது.

    247 ஏரிகள் 25 சதவீதத்துக்கும் கீழ் நிறைந்துள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் 37.40 மி.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் 29.20 மி.மீ., உத்திரமேரூர் 27 மி.மீ., வாலாஜாபாத் 6.40மி.மீ., செம்பரம்பாக்கம் 31.20மி.மீ., குன்றத்தூர் 40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலி மேடு, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், பரந்தூர், கீழம்பி, தாமல், மகரல், வாலாஜாபாத், உத்திரமேரூர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழையின் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மழைக்கான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    மேலும் கனமழை அறிவிப்பு எதிரொலியை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது.

    இதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 69 மில்லி மீட்டர் மழையும், சோழவரத்தில் 61 மில்லி மீட்டர் மழையும், செங்குன்றத்தில் 54 மில்லி மீட்டர் மழையும், ஜமீன் கொரட்டூரில் 47 மில்லி மீட்டர் மழையும், ஆவடியில் 45 மில்லி மீட்டர் மழையும். பூந்தமல்லியில் 39 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டையில் 36 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    கும்மிடிப்பூண்டியில் 32 மில்லி மீட்டர் மழையும், பூண்டியில் 31 மில்லி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக திருத்தணியில் 13 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    இந்நிலையில் திருத்தணி மலைக்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளிப்பட்டு ஆர்.கே. பேட்டை திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், கே.ஜி.கண்டிகை, ஆகிய பகுதிகளில் விடியற் காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×