search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கொட்டிய கனமழை
    X

    கோப்பு படம்

    திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கொட்டிய கனமழை

    • மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.
    • மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

    திருச்சி:

    வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 61.2 சென்டி மீட்டர் மழை பதிவானது. நேற்று மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. திருச்சி மாநகரில் நேற்று இரவு இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது.

    ஏற்கனவே மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வரும் காரணத்தினால் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு கிடக்கிறது. இந்த நிலையில் பெய்த மழையால் பெரும்பாலான சாலைகள் சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக திருச்சி டவுன் பகுதியில் 58.3 மில்லி மீட்டர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் 42, ஏர்போர்ட் பகுதியில் 19.6,பொன்மலையில் 39.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கிராமப்புறங்களில் குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மணச்சநல்லூர் தாலுகாவில் வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 11.2 மில்லி மீட்டர், மணப்பாறையில் 7.6, முசிறியில் 20 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் 9.5, துவாக்குடி 5.1,துறையூர் தென்பர நாடு பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கரூர் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது. இன்று காலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

    கடந்த 2 நாட்களில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கந்தர்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே மானாவாரி நிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச கிணறுகளீல் நீர் இருப்பு குறைவாக இருந்தது.

    தற்போது பெய்த மழையால் பயிர்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் காவிரி பாசன பகுதியிலும் மழை பெய்துள்ளதால் சம்பா பயிர்களுக்கு இதமாக அமையும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×