search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வராண்டாவில் படுத்திருந்த தாய், குழந்தைக்கு தனி அறை ஒதுக்கீடு- கல்லூரி முதல்வர் உத்தரவு
    X

    அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வராண்டாவில் படுத்திருந்த தாய், குழந்தைக்கு தனி அறை ஒதுக்கீடு- கல்லூரி முதல்வர் உத்தரவு

    • தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார்.

    விக்கிரவாண்டி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 28). கர்ப்பிணியான இவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தையின் கையில் வழக்கத்தைவிட தசை அதிகமாக இருந்ததால், குழந்தைகள் வார்டிற்கு தாய் மற்றும் சேயை மாற்றினர். அங்கிருந்த அனைத்து படுக்கையிலும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் ராதிகா மற்றும் அவரது குழந்தைக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி பதில் அளித்தார். இது தொடர்பாக இருவருக்குமிடையே டுவிட்டரில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது.

    இந்நிலையில், வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்த ராதிகா மற்றும் அவரது குழந்தைக்குக்கு தனி அறை ஒதுக்கிடு செய்ய மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார். அங்கு குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×