search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்களை சந்தோசப்படுத்தும் இலவச பஸ்
    X

    பெண்களை சந்தோசப்படுத்தும் இலவச பஸ்

    • சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வரும்போது இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் இந்த முறை தி.மு.க. அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் என்ன நினைக்கிறார்கள் சென்னை பெண்கள்? என்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது.

    சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். நூறு பேர் திருநங்கைகள்.

    இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 89 சதவீத பெண்கள் போக்கு வரத்திற்கு அரசு பஸ்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இவ்வாறு போக்குவரத்துக்கு அரசு பஸ்களை நம்பி இருக்கும் 89 சதவீத பெண்களில் 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பஸ் பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.

    அதில் 42 சதவீதம் பெண்கள் பஸ் பயணத்தின் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் 35 சதவீதம் பெண்கள் கூறும் போது பஸ்சில் ஏறும் போதும், பஸ் நிறுத்தங்க ளில் பஸ்சுக்காக காத்தி ருக்கும் போதும் இந்த மாதிரி பாலியல் ரீதியி லான தொந்த ரவுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

    384 பெண்கள் பாலியல் தொந்தர வுகளை பஸ் பயணத்தின் போது சந்தித்திருப்பதாக கூறுகிறார்கள். அவர்களில் 62 சதவீதம் பேர் துணிச்ச லாக தட்டி கேட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூட உதவிக்கு முன் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர்.

    ஆனால் இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி 62 சதவீத பெண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. 32 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே காவலன் செயலியை பற்றிய புரிதல் இருக்கிறது. 10 சதவீதம் பேர் பெண்களுக்கு உதவுவதற்கான பெண்கள் போலீஸ் ரோந்து வாகனத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள்.


    29 சதவீத பெண்கள் மாநகர பஸ்களில் அவசர உதவிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொத்தான் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு மேயர் பிரியா கூறும் போது, பஸ் பயணம் செய்யும் பெண்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இதன் மூலம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரைகள் செய்யப்படும் அடிக்கடி பஸ்களை இயக்க வேண்டும் பெண்களுக்காகவே பஸ்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசரகால பொத்தான் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் 10 சதவீத பெண்கள் இதே போல் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பஸ்களில் மட்டுமல்ல மெட்ரோ ரெயிலில் கூட நடப்பதாக தெரிவித்து உள்ளார்கள் என்றார்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் கூறும்போது, நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. கவுன்சிலிங்களும் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என்று தெரியவரும் இடங்களில் கூடுதலான ரோந்து பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

    Next Story
    ×