search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி விவகாரம்- உடற்கூராய்வு முடிவுகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு
    X

    கள்ளக்குறிச்சி விவகாரம்- உடற்கூராய்வு முடிவுகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

    • 2 உடற்கூராய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தது.
    • ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு.

    கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள், குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு அறிக்கைகள் ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்வதற்காக 2 உடற்கூராய்வு அறிக்கைகளை சிபிசிஐடி போலீஸ் ஒப்படைத்தது.

    ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×