search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
    X

    பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

    • பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம்.
    • செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம்.

    சேலம்:

    தமிழக அரசின் உத்தரவின் பேரில் பஞ்சு மிட்டாய்கள் விற்கப்படும் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். அதன்படி சேலம் மாவட்டத்தில் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இதில் உணவு பொருளுக்கு அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? என்றும் அனுமதிக்கப்பட்ட நிறமிகள் குறிப்பிட்ட அளவு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மால், பெங்களூர் பைபாஸ் சாலையில் உள்ள பஞ்சு மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

    2-வது நாளாக இன்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சு மிட்டாய் கடைகள் மற்றும் ரோட்டோரம் பஞ்சு மிட்டாய் விற்பவர்களிடம் மாதிரிகளை எடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் 8 மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வரும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஆய்வு2-வது நாளாக இன்றும் நடைபெறுவதாகவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெிவித்தனர்.

    பஞ்சு மிட்டாய்களில் கலக்கப்படும் ரசாயனம் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு பின்னர் புற்று நோயாக மாறும் அபாயம் இருக்கிறது. சிறுநீர் பிரச்சினைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது.

    செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×