என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 4 நாட்களில் 36 பேர் வேட்பு மனு தாக்கல்

- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
- கடந்த 4 நாட்களாக நடந்த வேட்பு மனு தாக்கலில் இதுவரை 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கியது.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். முதல் நாளில் சுயேட்சைகள் பலர் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர். முதல் நாளில் 4 சுயேட்சைகள் மனு ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2-வது நாள் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உள்பட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக நடந்த வேட்பு மனு தாக்கலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று 4-வது நாளாக வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடந்தது. நேற்று காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அ.ம.மு.க வேட்பாளர் சிவ பிரசாந்த், ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் செந்தில் முருகன் உள்பட நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த 4 நாட்களாக நடந்த வேட்பு மனு தாக்கலில் இதுவரை 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று தொடர்ந்து 5-வது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இன்று சில சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வரும் 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 7-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதன் பின்னர் 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 10-ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
