search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி மாணவர் படுகாயம்
    X

    ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கி மாணவர் படுகாயம்

    • ரெயில் புறப்பட்டபோது மாணவர் நேதாஜி பெட்டியில் ஏறியதாக தெரிகிறது.
    • நேதாஜியின் இரண்டு கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டாகி போனது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தினசரி கல்லூரிக்கு மதுராந்தகத்தில் இருந்து ரெயிலில் சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேதாஜி இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மதுராந்தகம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது சென்னை நோக்கி செல்லும் விழுப்புரம் பயணிகள் ரெயில்வந்தது.

    ரெயில் புறப்பட்டபோது மாணவர் நேதாஜி பெட்டியில் ஏறியதாக தெரிகிறது. அப்போது அவர் கால் தவறி ரெயில் தண்டவாளத்திற்கும் ரெயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

    இதில் தண்டவாளத்தில் விழுந்த போது அவரது கால்களில் ரெயில் பெட்டியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் நேதாஜியின் இரண்டு கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டாகி போனது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள், மற்றும் ரெயிலில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் மதுராந்தகம் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×