என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெளிமாவட்ட வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளி சந்தையில் களை கட்டிய தீபாவளி விற்பனை
    X

    வெளிமாவட்ட வியாபாரிகள் வருகையால் ஈரோடு ஜவுளி சந்தையில் களை கட்டிய தீபாவளி விற்பனை

    • ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதிய ஜவுளி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், சென்ட்ரல் மார்க்கெட் பகுதி, அசோகபுரம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெற்று வருகிறது.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது.

    நேற்று இரவு கூடிய ஜவுளி சந்தையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மொத்த விலைக்கு துணிகளை கொள்முதல் செய்து அள்ளி சென்றனர்.

    இதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் நேற்று இரவு நடந்த ஜவுளி சந்தைக்கு வந்திருந்தனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜவுளி சந்தையில் ஏராளமான புதிய துணிகள் அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளன.

    குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புதிய ஜவுளி ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

    நேற்று இரவு முதல் தொடர்ந்து தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. சில்லரை வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் வரும் நாட்களில் இதைவிட தீபாவளி வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதுவரை மந்தமாக நடைபெற்று வந்த ஜவுளி வியாபாரம் தீபாவளியை முன்னிட்டு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×