என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ராஜபாளையம் அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்- குத்தகை எடுத்தவர்கள் வேதனை
    X

    ராஜபாளையம் அருகே கண்மாயில் செத்து மிதக்கும் மீன்கள்- குத்தகை எடுத்தவர்கள் வேதனை

    • மீன்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் கண்மாயில் செத்து மிதந்தன.
    • தமிழக அரசு மீன் குஞ்சுகளை விற்பனை செய்ய மீன்வளத்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட குலசேரிபெரிகண்மாய் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் கண்மாய் ஏலம் விடப்பட்டது.

    இந்த கண்மாயை தெற்கு வெங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிள்ளையார் சாமி என்பவர் ஏலம் எடுத்து கர்நாடகாவில் இருந்து மீன் குஞ்சுகள் வாங்கி வந்து கண்மாயில் விட்டுள்ளார். மீன்கள் போதிய வளர்ச்சி இல்லாமல் கண்மாயில் செத்து மிதந்தன. இதனால் ரூ. 13 லட்ச வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக குத்தகை எடுத்தவர் வேதனை தெரிவித்தார்.

    தமிழக அரசு மீன் குஞ்சுகளை இதுபோன்ற கண்மாய்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால் குஞ்சுகள் தரம் தெரிந்து கண்மாய்களில் விட்டு நல்ல வளர்ச்சி அடைந்தவுடன் விற்பனை செய்ய முடியும். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வரும் மீன்குஞ்சுகள் வளர்ச்சி இல்லாமல் செத்து மிதப்பதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் குத்தகை எடுத்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    தமிழக அரசு மீன் குஞ்சுகளை விற்பனை செய்ய மீன்வளத்துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×