என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் கைது
    X

    திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரசார் கைது

    • காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி சென்றனர்.
    • பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    கொடைரோடு:

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ரெயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடைரோடு ரெயில்நிலையத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்துல்கனிராஜா தலைமையில், நிலக்கோட்டை வட்டார தலைவர் கோகுல்நாத், மகளிரணி தனலட்சுமி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து கொடைரோடு ரெயில்நிலையத்தில் ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க முயன்றனர்.

    ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடுப்புகளை அமைத்தனர். இருந்த போதும் ரெயில்நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். டி.எஸ்.பி இமானுவேல் ராஜ்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் குருவத்தாய் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி சென்றனர்.

    இதேபோல் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×