search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி அருகே கிராமமக்கள் நடத்திய சேவல் சண்டை
    X

    திருத்தணி அருகே கிராமமக்கள் நடத்திய சேவல் சண்டை

    • சேவல் சண்டை போட்டியை பார்க்க ஏராளமானோர் புதூர் கிராமத்தில் குவிந்தனர்.
    • காணும் பொங்கல் விழா அப்பகுதியில் களை கட்டியது.

    திருத்தணி:

    பொங்கல் பண்டிைக என்றாலே ஜல்லிக்கட்டு நினைவுக்கு வரும். இதற்கு அடுத்த இடத்தில் சேவல் சண்டை உள்ளது. பெரும்பாலான இடங்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நடத்தப்படுவதில்லை.

    இந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை புதூர் கிராமத்தில் உரிய அனுமதி பெற்று இன்று சேவல் சண்டை நடத்தப்பட்டது.

    இதனால் புதூர் கிராமமே களை கட்டியது. இதில் பங்கேற்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சண்டை சேவல்கள் வந்தன. சொகுசு கார்களில் பிரத்யேக கூண்டில் இந்த சேவல்கள் வெளி மாநிலங்களில் இருந்து பத்திரமாக கொண்டு வரப்பட்டது. இந்த சேவ்லகள் சுமார் 1½ அடி உயரம் வரை இருந்தது. கம்பீரமாக காணப்பட்ட சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.

    சேவல் சண்டைக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் கிளிக்கொண்டை சேவல், வெள்ளைக் கொண்டை வெள்ளை சேவல், முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன. சுமார் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டி களத்தில் இறக்கப்பட்டது. 3 சுற்றுகள் நடத்தப்பட்டு சண்டையில் வெற்றி பெற்ற சேவல் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற சேவல்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

    இந்த சேவல் சண்டையில் தங்களது சேவல்கள் பங்கேற்பதை கவுரவமாக கருதுவதாக இதில் பங்கேற்றவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சேவல் சண்டை போட்டியை பார்க்க ஏராளமானோர் புதூர் கிராமத்தில் குவிந்தனர். இதனால் காணும் பொங்கல் விழா அப்பகுதியில் களை கட்டியது.

    Next Story
    ×