search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் தீவுத்திடல் சுற்றுலா-தொழில் பொருட்காட்சி 3- ந்தேதி தொடங்குகிறது
    X

    சென்னையில் தீவுத்திடல் சுற்றுலா-தொழில் பொருட்காட்சி 3- ந்தேதி தொடங்குகிறது

    • இந்த ஆண்டுக்கான 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.
    • 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், ராட்டினங்கள், பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள் என ஏராளம் இடம்பெற உள்ளன.

    சென்னை:

    சென்னை தீவுத்திடல் சுற்றுலா- தொழில் பொருட்காட்சி வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது.

    சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா- தொழில் பொருட்காட்சி நடைபெறும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீவுத்திடல் பொருட்காட்சி நடைபெறவில்லை.

    இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வருகிற 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது. இந்த 47-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், ராட்டினங்கள், பொருட்கள் வாங்கும் கடைகள், உணவகங்கள் என ஏராளம் இடம்பெற உள்ளன.

    மேலும் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரசு துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது இதன் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி வருகிற 3-ந்தேதி தொடங்கப்பட்டு 70 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்காட்சி நடத்தப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×