search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கட்டிடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்தார்- அதிர்ச்சியில் இருந்து மீளாத ரிக்ஷா தொழிலாளி
    X

    கட்டிடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்தார்- அதிர்ச்சியில் இருந்து மீளாத ரிக்ஷா தொழிலாளி

    • கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக 6 மாதத்திற்கு முன்பே அங்கு தங்கி இருந்தவர்கள் காலி செய்துள்ளனர்.
    • கட்டிடம் இடிந்த போது குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது.

    சென்னை பிராட்வேயில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழைய கட்டிடத்தின் 4வது தளத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடத்தின் கீழ் பகுதியில் லாரி செட் செயல்பட்டு வந்தது. மற்ற பகுதிகளில் ஆட்கள் குடியிருந்து வந்துள்ளனர். கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக 6 மாதத்திற்கு முன்பே அங்கு தங்கி இருந்தவர்கள் காலி செய்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கட்டிடம் இடிந்து விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.

    கட்டிட இடிபாட்டில் பாளையம் என்பவரின் ரிக்ஷாவும் சிக்கி உருக்குலைந்து போயுள்ளது. ரிக்ஷாவை நிறுத்தி விட்டு தூரத்தில் இருந்ததால் தொழிலாளி பாளையம் உயிர் தப்பி உள்ளார். கட்டிடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமலேயே உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, எனது ரிக்ஷாவும் சிலரின் வாகனங்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளன. கட்டிடம் இடிந்த போது குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. அப்பகுதியே அதிர்ந்தது என்றார்.

    Next Story
    ×