என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊத்துக்கோட்டையில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- தி.மு.க. தமிழ் மொழியை ஒழிக்க முயற்சி செய்வதாக குற்றம் சுமத்தி ஊத்துக்கோட்டையில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
- அரசு தொடர்புத் துறை மாநில தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஊத்துக்கோட்டை:
தி.மு.க. தமிழ் மொழியை ஒழிக்க முயற்சி செய்வதாக குற்றம் சுமத்தி ஊத்துக்கோட்டையில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பூண்டி கிழக்கு ஒன்றிய தலைவர் பினாங்கு ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
மாநில செயலாளர் சூர்யா, அரசு தொடர்புத் துறை மாநில தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
மாவட்ட பொதுச் செயலாளர் அன்பாலயா சிவகுமார், மூர்த்தி, ரவி துணைத்தலைவர்கள் சோமு ராஜசேகர், சாந்தி மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 30 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
Next Story






