என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்- மத்திய மந்திரி பேட்டி
    X

    பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்- மத்திய மந்திரி பேட்டி

    • பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நீங்களாகவே முன்வந்து உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தூய்மை பணிகளை ஈடுபட வேண்டும்.
    • நாடு முழுவதும் தற்போது கொரோனா அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை பழங்கா நத்தம் உழவர் சந்தை அருகில் தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார்.

    முன்னதாக அவர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் பழங்காநத்தம் உழவர் சந்தையில் மருத்துவ முகாமை கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மகப்பேறு மருத்துவமனையில் துப்புரவு பணியில் மத்திய மந்திரி ஈடுபட்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியஅரசு நாடு முழுவதும் ''ஸ்வச் பாரத்'' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது நாடு முழுவதும் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மகாத்மா காந்தி வழியில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். சுதந்திரத்துக்கு முன்பு நாடு முழுவதும் பெரிய அளவில் சுகாதாரமின்மை நிலவியது.

    பிரதமர் மோடி ''ஸ்வச் பாரத்'' திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் நாட்டில் சுத்தம், சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுத்தம்-சுகாதாரத்தை பாதுகாப்பதில் மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் தாமாகவே முன்வந்து ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நீங்களாகவே முன்வந்து உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தூய்மை பணிகளை ஈடுபட வேண்டும் என்பது தான். மாநகரின் முக்கிய பகுதிகள் மட்டுமின்றி தெருக்களிலும் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லா விட்டால் ''ஸ்வச் பாரத்'' திட்டம் வெற்றி பெறாது.

    நாடு முழுவதும் தற்போது கொரோனா அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்தும் வகையில், மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கொரோனா என்னும் கொடிய அரக்கனை நாட்டில் இருந்து விரட்ட முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி கிஷன் ரெட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×