search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழைநீர் கால்வாய் பணி முடியாததால் தண்ணீர் தேக்கம்- கொசுவுக்கு பயந்து கடைகளை மூடும் வியாபாரிகள்
    X

    மழைநீர் கால்வாய் பணி முடியாததால் தண்ணீர் தேக்கம்- கொசுவுக்கு பயந்து கடைகளை மூடும் வியாபாரிகள்

    • ஆலந்தூரில் இருந்து வரும் அனைத்து கழிவுநீரும் இதில் கலப்பதால் தண்ணீர் நிறம்மாறி துர்நாற்றம் வீசுகிறது.
    • மழைநீர் வடிகால் பணியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் கக்கன் நகர், சிட்டி லிங்க் ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணி சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு நடைபெற்று வருகிறது. கடந்த 8 மாதமாகியும் இந்த பணி முடிவடையாததால் சாலையோரத்தில் ஆறு போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    ஆலந்தூரில் இருந்து வரும் அனைத்து கழிவுநீரும் இதில் கலப்பதால் தண்ணீர் நிறம்மாறி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த பகுதி முக்கிய சாலை என்பதாலும், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி என்பதாலும் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. வீடுகள், கடைகளுக்குள் கொசுக்கள் படையெடுத்து பதம்பார்த்து வருகின்றன. கொசுக்களை விரட்ட எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பலனிக்காமல் கொசுக்கடியால் தவித்து வருகிறார்கள்.

    இரவு நேரங்களில் வியாபாரிகளால் கடையில் இருக்க முடியாத நிலை நீடித்து வருகிறது. அவர்கள் கொசுவுக்கு பயந்து மாலையிலேயே கடையை அடைத்து அரை நாள் விடுமுறை விட்டுச் செல்லும் நிலை உள்ளது. இதேபோல் மழைநீர் வடிகால் பணியால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. பஸ்நிலையத்தில் பஸ்களை நிறுத்த முடியாத நிலை உள்ளதால் அங்கு நிற்க முடியாமல் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மேலும் இந்த வடிகால் வழியாக செல்லும் கழிவு நீர் அனைத்தும் வேளச்சேரி ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி நீர் மாசு அடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×