என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நிலக்கரி சுரங்கம் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசுக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
- அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசி இத்திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் கைவிடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. நிலக்கரி சுரங்கம் அமைந்தால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழக மக்களின் உணர்விற்கு மதிப்பளித்து பிரதமர் மோடி இத்திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில், மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசி இத்திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் கைவிடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார்.
இந்த இனிய செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ள பிரதமருக்கும், மத்திய நிலக்கரித்துறை மந்திரி பிரகலாத் ஜோசிக்கும் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்