என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் 60 ஆயிரம் தேசியக் கொடி- அமைச்சர் வழங்கினார்
- கிராம ஊராட்சிகளுக்கு 60 ஆயிரம் தேசிய கொடி வழங்கும் விழா நடைபெற்றது.
- அமைச்சர் தா.மோ.அன்பசரன் 42 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய கொடியை வழங்கினார்.
காஞ்சிபுரம்:
75-வது சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கு 60 ஆயிரம் தேசிய கொடி வழங்கும் விழா நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ.அன்பசரன் 42 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய கொடியை வழங்கினார்.
மேலும் பசுமை மூலிகை தோட்டம், உணவு வழங்கும் குடில், தேனீர் விடுதி குடில், வாகனங்கள் நிறுத்துமிடம், தமிழ் வாழ்க பெயர் பலகை திறப்பு விழா ஆகிய பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை, மஞ்சள் பையும் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:-
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கிட்டத்தட்ட 60 ஆயிரம் வீடுகள் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில், அனைத்து வீடுகளுக்கும், தேசிய கொடிகள் வழங்கப்படுகிறது.
சுதந்திர தின விழா எந்த ஊராட்டசியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறதோ அந்த ஊராட்சிக்கு ஒன்றிய தொகுதி நிதியில் இருந்து வளர்ச்சி நிதியாக ரூ.10 லட்சம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்.பி., செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி, மனோகரன் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் 55 ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடியை ஒன்றிய சேர்மன் ரவி ஊராட்சி தலைவர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, ராமகிருஷ்ணன் அத்திப்பட்டு துணை தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல், வல்லூர் தலைவர் உஷா ஜெயகுமார், வேலூர் சசிகுமார், கானியம் பாக்கம்ஜெகதீசன், கோளூர் குமார், தடப் பெரும்பாக்கம் பாபு, திருப்பாலைவனம் கங்கை அமரன், கோட்டை குப்பம் சம்பத், வஞ்சி வாக்கம் வனிதா ஸ்ரீ ரமேஷ், பெரும்பேடு ராஜேஷ், கொடூர் கஸ்தூரி மகேந்திரன், ஏலியம்பேடு சுகுணா, ஊராட்சி செயலாளர்கள் கொண்ட கரை முருகன், அனுப்பம்பட்டு செந்தில்குமார், ஏலியம்பேடு நவமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






