என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க 155 மாணவ-மாணவிகள் தேர்வு
    X

    அமைச்சர்கள் அன்பில் மகேஷ், தா.மோ.அன்பரசன் செஸ் விளையாடிய காட்சி


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க 155 மாணவ-மாணவிகள் தேர்வு

    • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்குகிறது.
    • செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க 155 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி தொடங்குகிறது.

    இந்த போட்டியை மாணவ-மாணவிகள் நேரில் பார்வையிட 38 மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் தற்போது செஸ் ஒலிம்பியாட்போட்டியை நேரில் பார்க்க 155 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்த வெளியூர்களில் இருந்து வரும் பள்ளி மாணவர்கள் எங்கு தங்குகிறார்கள்? எந்த அரங்கத்தை பார்க்கிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாமல்லபுரம் வந்தார்.

    அவர் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தை பார்வையிட்டார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    ஆய்வின் போது அங்கு தயார் நிலையில் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் செஸ் போர்டில், அமைச்சர்கள் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தா.மோ.அன்பரசன் ஆகியோர் செஸ் காய்களை நகர்த்தி பரிசோதனை விளையாட்டாக செஸ் விளையாடினர்.

    அப்போது கலெக்டர் ராகுல்நாத் டிஜிட்டல் போர்டின் பயன்பாடு குறித்தும் இணையத்தில் இணைந்து விளையாடும் புதிய தொழில்நுட்பம் குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

    Next Story
    ×