search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு- மெட்ரோ ரெயிலில் 7 ஆண்டுகளில் 12 கோடி பேர் பயணம்
    X

    பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு- மெட்ரோ ரெயிலில் 7 ஆண்டுகளில் 12 கோடி பேர் பயணம்

    • 01.01.2022 முதல் 30.04.2022வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • 01.05.2022 முதல் 31.05.2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது மெட்ரோ ரெயில் சேவையை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன்29 முதல் சென்னையில் துவங்கியது. மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. இதுவரை சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த ஏழு ஆண்டுகளில் அதாவது, 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 12கோடியே 28லட்சத்து 24ஆயிரத்து 577பயணிகள் பயணித்துள்ளார்கள்.

    01.01.2022 முதல் 30.04.2022வரை மொத்தம் 1,47,19,991 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.05.2022 முதல் 31.05.2022 வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.06.2022 முதல் 30.06.2022 வரை மொத்தம் 52,90,390 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், மே மாதத்தை காட்டிலும் ஜூன் மாதத்தில் 5,02,544 பயணிகள் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2022, ஜூன் மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 13,18,641 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31,65,340 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டில் 11.09.2020 முதல் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழக்கம் போல் வழங்கி வருகிறது. மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள மெட்ரோ ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×