என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுராந்தகம் அருகே ஓங்கூர் பாலத்தை கடக்க 10 கி.மீ. தூரம் காத்திருக்கும் வாகனங்கள்
    X

    மதுராந்தகம் அருகே ஓங்கூர் பாலத்தை கடக்க 10 கி.மீ. தூரம் காத்திருக்கும் வாகனங்கள்

    • வாகனங்களால் 10 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • போக்குவரத்து நெரிசலால் ஓங்கூர் ஆற்று பாலத்தை கடக்க 3 மணி நேரத்திற்கு மேலாகிறது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவில் விழுப்புரம் மாவட்ட எல்லை தொடக்கத்தில் ஓங்கூர் ஆற்று பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஒரு வழி பாதையில் போக்குவரத்து செல்கிறது.

    இதனால் நெரிசலில் வாகனங்களால் 10 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட எல்லை முடிவான ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே விழுப்புரம் மாவட்ட தொடக்க எல்லையில் ஓங்கூர் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மேலே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைந்திருக்கிறது.

    நேற்று மாலை முதல் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாதையில் பாலம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அதிகமான பழுதடைந்தது. இதனால் நெடுஞ்சாலை துறையின் சார்பில் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    பாலம் பராமரிப்பு பணி நடைபெறும் 200 மீட்டர் தூரத்திற்கு திருச்சி-சென்னை சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றி எதிர் திசையில் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக வழி செய்யப்பட்டு வாகனங்கள் செல்கின்றன.

    இந்த நிலையில் 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் செல்ல தொடங்கின.

    இன்று காலை 5 மணி முதல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் சென்று கொண்டிருக்கின்றன. ஓங்கூர் பாலத்தில் ஒரு வழி பாதையில் வாகனங்கள் செல்வதால் ஓங்கூரிலிருந்து -அச்சரப்பாக்கம் வரை 10 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் காத்து நின்றபடி மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருக்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலால் ஓங்கூர் ஆற்று பாலத்தை கடக்க 3 மணி நேரத்திற்கு மேலாகிறது.

    Next Story
    ×