search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் 5,548 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்
    X

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத வந்த பெண்கள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் 5,548 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் மொத்தம் 4609 ஆண்களும், 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.
    • தேர்வு எழுதுபவர்கள் கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 548 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்தத் தேர்வில் திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 1309 ஆண்கள் மட்டும் தேர்வு எழுதுகின்றனர். காக்களூர் சி, சி, சி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1300 பேரும், பாண்டூர் இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 700 பேரும், திருத்தணி ஜி.ஆர்.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 மையங்களில் மொத்தம் 4609 ஆண்களும், 939 பெண்களும் தேர்வு எழுதுகின்றனர்.

    இந்த தேர்வு எழுதுபவர்கள் கைப்பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்களை தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. சோதனைக்கு பின்னரே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் எழுத்துத்தேர்வை கண்காணிக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 4 துணை போலீஸ் சூப்பிரண்டு, 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 532 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×