search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி விடுவிப்பு
    X

    நூலகம்

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி விடுவிப்பு

    • உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
    • கிராம ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.270 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ. 50 கோடியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    பட்ஜெட்டில் நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள ரூ .5080 கோடியில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு மட்டும் ரூ.752 கோடி விடுவிக்கப்பட்டு இருக்கிறது.

    உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

    கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் இதன் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளன.

    கிராம ஊராட்சிகளுக்கு ரூ.424 கோடியும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.270 கோடியும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ. 50 கோடியும் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி, தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

    ஊழியர்களுக்கு நிதி, புதிய கழிவறைகள் கட்டுதல், நூலகங்களை ஏற்படுத்துதல், அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல், தெருவிளக்குகள், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தலும் இந்த நிதியின் கீழ் நடைபெறும்.

    Next Story
    ×