என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏப்ரல் 11 அன்று ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு
    X

    ஏப்ரல் 11 அன்று ரம்ஜான் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு

    • ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
    • ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது

    ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    கடந்த மார்ச் 11 அன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், இன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் ஏப்ரல் 11 அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

    ஆகையால் வரும் வியாழக்கிழமை (11-4-24) அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    Next Story
    ×