search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்ளாட்சி இடைத்தேர்தல்- தேனி மாவட்டத்தில் விறுவிறுப்பாக வாக்களித்த பொதுமக்கள்
    X

    உள்ளாட்சி இடைத்தேர்தல்- தேனி மாவட்டத்தில் விறுவிறுப்பாக வாக்களித்த பொதுமக்கள்

    • வடபுதுப்பட்டியில் 9,379 பேர், சின்னஓவுலாபுரத்தில் 480 பேர், டி.வாடிப்பட்டியில் 124 பேர் என 9985 வாக்காளர்கள் உள்ளனர்.
    • வாக்குச்சாடியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி, பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 9 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த மாதம் 20ந் தேதி தொடங்கி 27ந் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    வடபுதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தாலம்பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர், சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த பதவிகளுக்கு 14 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதில் வடபுதுப்பட்டியில் 9,379 பேர், சின்னஓவுலாபுரத்தில் 480 பேர், டி.வாடிப்பட்டியில் 124 பேர் என 9985 வாக்காளர்கள் உள்ளனர். இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து சென்றனர். பாதுகாப்பு பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். வாக்குச்சாடியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

    Next Story
    ×