search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருமுட்டை விவகாரம்- சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
    X

    கருமுட்டை விவகாரம்- சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

    • சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.
    • சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே ஒவ்வொரு நாளும் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஏ.டி.எஸ்பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீசார், சென்னையை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் என தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோரின் காவல் முடிவடைந்ததால் அவர்களை மீண்டும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது பெண் புரோக்கர் மாலதியை 5 நாள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர்.

    ஆனால் நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது வங்கி கணக்கில் எத்தனை முறை பண பரிமாற்றம் நடந்துள்ளது என்ற விவரங்களை சேகரித்தனர். எந்தெந்த நாட்களில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. சிறுமியை தவிர வேறு சில பெண்களை புரோக்கர் மாலதி மூளை சலவை செய்து கருமுட்டையை எடுத்து உள்ளாரா? என்பது குறித்து அவரிடம் விரிவாக விசாரணை நடத்தினர்.

    நேற்று மதியம் வரை பெண் புரோக்கர் மாலதியிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை ஆகியோரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    பெண் புரோக்கர் மாலதியிடம் பெற்ற சில முக்கிய தகவலை அடிப்படையாக வைத்து சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல்வேறு தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளதால் போலீசார் அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×