search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் தெப்பக்குளத்தில் குளித்த பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி
    X

    மாணவர் விஜய்

    கோவில் தெப்பக்குளத்தில் குளித்த பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி

    • மாணவன் தனது நண்பர்களுடன் தெப்பக்குளத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.
    • தெப்பக்குளத்தில் குளித்தபோது விஜய் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே கட்டிநாயகன்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்.

    இவர் மகன் விஜய் (17). ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று கட்டிநாயகன்பட்டி மாரியம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் தனது தாய் பழனியம்மாளுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவன் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இதையடுத்து குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளம் அருகே விஜயின் சட்டை, பேண்ட் இருப்பதை பார்த்த ஊர் பொதுமக்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து ஜலண்டாபுரம் போலீசார் மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    மாணவன் தனது நண்பர்களுடன் தெப்பக்குளத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி தீயணைப்பு துறையினர் தெப்பக்குளத்தில் தேடி பார்த்தனர். பின்னர் மாணவன் விஜயை பிணமாக மீட்டனர்.

    தெப்பக்குளத்தில் குளித்தபோது விஜய் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×