search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி- ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
    X

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள போலீசார்.

    பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி- ஈரோடு ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் நிர்வாகிகள் வீடுகள், கார் போன்றவை தீ வைத்து வருகின்றன.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ.க. அலுவலகம், பா.ஜ.க. நிர்வாகி வீடு, இந்து முன்னணி அலுவலகம், இந்து முன்னணி நிர்வாகி வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தலைவர்கள் சிலை வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில் நிலையத்திற்கு துப்பாக்கி இந்தியா போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு ரெயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள், தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து வரும் மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயிலில் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று கண்காணித்து வருகின்றனர். ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் உடைமைகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயிலில் இருக்கும் பெட்டிகள், பைகளை தொட வேண்டாம் என்றும், இது குறித்து ரெயில்வே போலீசருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×