search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வி.சி.க. ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
    X

    வி.சி.க. ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

    • ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இன மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அங்கு பேசிக் கொண்டிருந்த இளமதி அசோகனின் சேலையில் தீ பிடித்தது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. பின்னர் புதுக்கோட்டை உதவி கலெக்டர் ஐஸ்வர்யா நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் காவல்துறை அனுமதி அளித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் அலட்சியத்தால் தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து மழையூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் முருகேசன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் அன்பு மற்றும் அன்பு ராஜா ஆகிய 3 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×