search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நகைக்கடை கொள்ளையர்களிடம் 3½ கிலோ தங்கம் பறிமுதல்- மேலும் 4 பேரை பிடிக்க அதிரடி வேட்டை
    X

    நகைக்கடை கொள்ளையர்களிடம் 3½ கிலோ தங்கம் பறிமுதல்- மேலும் 4 பேரை பிடிக்க அதிரடி வேட்டை

    • கொள்ளை தொடர்பாக இதுவரையில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளியான கங்காதரன், அருண், ஸ்டீபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள நகைக்கடையின் ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளி சென்றனர்.

    கடந்த மாதம் 10-ந் தேதி நடந்த கொள்ளை தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள். வெளி மாநில கொள்ளையர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் முகாமிட்டு அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கொள்ளை தொடர்பாக இதுவரையில் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வெல்டிங் கடைக்காரர்கள், கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கடை ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் பெங்களூருவில் தங்கி இருந்த தனிப்படை போலீசாரிடம் திவாகரன் (28), கஜேந்திரன் (31) ஆகியோர் சிக்கினர். இருவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 3½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட கஜேந்திரன், திவாகரன், கர்நாடக மாநிலம் தோட்டோ பட்டப்புரம் காரனோடை கிராமத்தை சேர்ந்தவர்கள். கஜேந்திரன் வெல்டராகவும், திவாகர் டிரைவராகவும் உள்ளனர்.

    பெரம்பூர் நகைக்கடை கொள்ளையர்கள் 20 நாட்களுக்கு மேலாக பிடிபடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான கங்காதரன், அருண், ஸ்டீபன், கவுதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×