என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
விருதுநகர் அருகே எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு- முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 34 பேர் கைது
BySuresh K Jangir29 Sep 2022 10:31 AM GMT
- ஓ.பி.எஸ். அணி கிழக்கு மாவட்ட செயலாளருமான பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டிருந்தனர்.
- போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் உள்பட 34 பேரையும் கைது செய்தனர்.
விருதுநகர்:
முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் இன்று காலை சிவகாசியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகாசி-விருதுநகர் சாலை வழியாக செல்ல இருந்தார்.
இது பற்றி அறிந்த சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ.பி.எஸ். அணி கிழக்கு மாவட்ட செயலாளருமான பாலகங்காதரன் உள்ளிட்ட 34 பேர் எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலையோரம் திரண்டிருந்தனர்.
இந்த போராட்டம் குறித்து அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் உள்பட 34 பேரையும் கைது செய்தனர்.
இது ஓ.பி.எஸ். அணி பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X