என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆண்டுக்கு ஒரு தடவை சுயம்புலிங்க தரிசனம்: ஆதிபுரீசுவரர் கோவிலில் 26-ந்தேதி கவச திறப்பு விழா
    X

    ஆண்டுக்கு ஒரு தடவை சுயம்புலிங்க தரிசனம்: ஆதிபுரீசுவரர் கோவிலில் 26-ந்தேதி கவச திறப்பு விழா

    • கவசம் திறக்கப்பட்டதும் 3 நாட்கள் தைல அபிஷேகம் நடைபெறும்.
    • வருகிற 28-ந்தேதி இரவு கவசம் மூடப்படும் திருநிகழ்ச்சி நடைபெறும்.

    சென்னை:

    சென்னை திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஒரு தடவை சுயம்புலிங்க தரிசனம் நடைபெறுவது வழக்கம். இதற்காக ஆதிபுரீசுவரர் சுவாமியின் கவச திறப்பு விழா நடைபெறும்.

    இந்நிலையில் சுயம்பு லிங்க தரிசனத்துக்காக வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆதிபுரீசுவரர் சுவாமியின் கவச திறப்பு விழா நடக்கிறது. இதையடுத்து பக்தர்கள் சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்யலாம்.

    கவசம் திறக்கப்பட்டதும் 3 நாட்கள் தைல அபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு வருகிற 28-ந்தேதி இரவு கவசம் மூடப்படும் திருநிகழ்ச்சி நடைபெறும்.

    ஆண்டிற்கு ஒரு முறையே நடைபெறும் இந்த பூஜை சிவபெருமானின் விஷேச பூஜைகளில் மிகவும் முக்கியமானதாகும்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் அம்மையப்பர் நேரடியாக காட்சி கொடுத்து திருமணம் செய்து வைத்த ஸ்தலம் என்பதாலும், வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதியாக காட்சிதர அருள் புரிந்த ஸ்தலம் என்பதாலும், 100 -க்கணக்கான சித்தர்களின் ஜீவ சமாதிக்கான முக்கிய ஸ்தலம் என்பதாலும் இந்த 3 நாட்களும் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அபிஷேகத்தை கண்டு களிக்க உள்ளனர். மேலும் இந்த 3 நாட்களும் ஆதிபுரீசுவரர் அடியார்கள் டிரஸ்ட் சார்பில் அதிகாலை முதல் இரவு வரை அன்ன தானமும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×