search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- அதிகாரிகள் நடவடிக்கை
    X

    திருத்தணியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்- அதிகாரிகள் நடவடிக்கை

    • தெப்பத்திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • திருத்தணி சன்னதி தெரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்றன. கடந்த வாரம் திருத்தணி கோவிலில் செய்யப்பட்டு உள்ள முன் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆய்வு செய்தார்.

    அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

    இந்த நிலையில் தெப்பத்திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி திருத்தணி சன்னதி தெரு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனை திருத்தணி தாசில்தார் வெண்ணிலா பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் வெண்ணிலா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    Next Story
    ×