search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடுமுடி அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள், கோழிகள் பலி- பொதுமக்கள் பீதி
    X
    பலியான ஆடுகளை படத்தில் காணலாம்.

    கொடுமுடி அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள், கோழிகள் பலி- பொதுமக்கள் பீதி

    • கந்தசாமி பட்டிக்கு வந்த போது 8 ஆடுகள், 3 கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கால்நடைகள் வேட்டையாடப்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கல்வெட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (56). விவசாயி.

    இவர் தனது தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 11 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கந்தசாமி ஆடுகள், மாடுகள், கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பட்டியை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    பின்னர் இன்று காலை கந்தசாமி பட்டிக்கு வந்த போது 8 ஆடுகள், 3 கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்து கிடந்த ஆடுகள், கோழிகள் கழுத்தில் மர்ம விலங்கு கடித்த தடயம் இருந்தது.

    இதுகுறித்து கந்தசாமி கிராம நிர்வாக அலுவலர், கால்நடை துறை, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்து கொன்றது செந்நாய் கூட்டமா அல்லது வேறு எந்த விலங்கு என தெரியவில்லை.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்தப் பகுதிகளில் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கால்நடைகள் வேட்டையாடப்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×